நவீன கைத்தொலைபேசிகளின் அத்தியாவசிய செயலிகள் ஆகிவிட்டன வாட்ஸ்ஆப்-பும் ஃபேஸ்புக்கும்.
கைத்தொலைபேசிகள் இடையே இணையம் மூலமாக குறுந்தகவல் அனுப்புவதற்குரிய வாட்ஸ்ஆப் (WhatsApp) செயலியை 1,600 கோடிகள் கொடுத்து வாங்கப்போவதாக சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் (Facebook) அறிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப்பை உருவாக்கியவர்களுக்கும், தற்போது அந்த நிறுவனத்தில் வேலைபார்த்து வருபவர்களுக்கும் மொத்தத்தில் 300 கோடி டாலர்களைக் கூடுதலாக வழங்கப்போவதாகவும் ஃபேஸ்புக் தெரிவிக்கிறது.
கைத்தொலைபேசி சேவை வழியாக குறுந்தகவல் அனுப்புவதற்கு ஆகும் செலவைக் குறைக்க வாட்ஸ்ஆப் உதவுவதால் ஏராளமான இளைஞர்களிடையே இந்தச் செயலி மிகவும் பிரபலமாக உள்ளது.இதுவரை காலத்தில் ஃபேஸ்புக் மிக அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கக்கூடிய நிறுவனம் வாட்ஸ்ஆப்தான்.
மொத்தத்தில் 45 கோடி பேர் இந்தச் செயலியைப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.
நூறு கோடிப் பேர் கணக்கில் மக்களை இணைக்கும் ஒரு செயலியாக வாட்ஸ்ஆப் வளர்ந்துவருகிறது என்றும், எனவே இதனுடைய மதிப்பு மிகவும் அதிகம் என்றும் ஃபேஸ்புக்கின் தோற்றுநர் மார்க் ஸுகர்பர்க் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment