யானைகளுக்கு முன்னோடி விலங்காகிய ‘மம்மூத்’தின் உடல் லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த ‘மம்மூத்’ என்ற உயிரினம் வாழ்ந்து வந்தது. இந்த உயிரினம் தற்போது அழிந்து விட்டது.
‘மம்மூத்’குட்டி ஒன்றின் உடல், கடந்த 2007 ஆம் ஆண்டு சைபீரியாவில் ஒரு மான் மேய்ப்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. சைபீரியா பனிகட்டிகள் நிறைந்த பகுதியாதலால் அந்த உடல் கெட்டு போகாமல் இருந்தது. அது, பதப்படுத்தப்பட்டு ‘மம்மி’பாணியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அது, 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கூறப்படுகிறது. பிறந்து ஒரு மாதமேயான அக்குட்டி 130 செமீ உயரமும், 50 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. அதன் வால் பகுதி, காயமடைந்துள்ளது. தும்பிக்கையில் மண் ஒட்டி இருந்தது. எனவே, கீழே விழுந்து, மூச்சித் திணறி இறந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பதப்படுத்தப்பட்ட அந்த ‘மம்மூத்’குட்டியை, லண்டனிலுள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment