உலக வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசு நிர்வாகம், தன் மக்களை இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்தச் சொல்லி எச்சரிக்கை வழங்கியுள்ளது.
இந்த பிரவுசரில் காணப்படும் மோசமான குறியீட்டுப் பிழையின் மூலம், கம்ப்யூட்டர் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் எளிதாக நுழைய முடியும் எனவும், இந்த பிழைக் குறியீட்டினைச் சரி செய்திடும் பேட்ச் பைல் தரப்படும் வரை, யாரும் இந்த பிரவுசரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டில், இணையப் பயன்பாட்டினைக் கண்காணித்து அவ்வப்போது தேவையான எச்சரிக்கைகளை US Computer Emergency Readiness Team என்ற அமைப்பு வழங்கி வருகிறது.
பிரிட்டனிலும் இதே அமைப்பு இயங்கி வருகிறது. பொதுவாக, பிரவுசர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளில், இந்த அமைப்புகள் எதுவும் சொல்வதில்லை. பிரவுசர் பயன்பாடு குறித்து முதல் முதலாக இது போன்ற எச்சரிக்கை அறிவிப்பினை இரண்டு அமைப்புகளும் வழங்கியுள்ளன.
இந்த பிழை குறியீடு என்னவென்று இன்னும் அறியப்படாததால், இதனை zeroday exploit எனக் குறிப்பிட்டுள்ளனர். இதன் வழியாக, ஹேக்கர்கள் எளிதாகக் கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களை, கம்ப்யூட்டர்களில் பயனாளர்களின் அனுமதியின்றி அமைத்துவிடலாம்.
இந்த புரோகிராம்கள் நம் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதுடன், நாம் இணையத்தில் காணும் தளங்கள், அவற்றின் தன்மைகள் ஆகியன குறித்தும் தகவல்களைச் சேகரித்து, இந்த புரோகிராம்களை அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும். அல்லது நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினையே அடுத்தவருக்குக் கொண்டு செல்லும் வகையில் செயல்படும்.
No comments:
Post a Comment