மங்கள்யான் ஐந்தாவது முறையாகவும் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப் பாதையில் உயர்த்தப்பட்டுள்ளது
செவ்வாய்க் கிரகம் குறித்து ஆய்வுகளை நடத்த இந்தியா செலுத்திய மங்கள்யான் விண்கலன் ஐந்தாவது முறையாக சனிக்கிழமை வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப் பாதையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் நீண்டகால திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முதலில் சந்திரனுக்கு ஒரு செயற்கைக் கோளையும், இப்போது செவ்வாய்க்கு ஒரு செயற்கைக் கோளையும் இந்தியா வெற்றிகரமாக அனுப்பியுள்ளதை அடுத்து, இந்தியாவின் வல்லமைகள் குறித்து சர்வதேச அளவில் நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன என்று செய்தியாளர்களும், துறைசார் வல்லுநர்களும் கூறுகிறார்கள்.
மங்கள்யான் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதன் மூலம் இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் மற்றும் செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் வல்லமைகள் குறித்த சர்வதேச நம்பிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், வளர்ந்த நாடுகள் மட்டுமன்றி வளர்ந்து வரும் நாடுகளும், இனிவரும் காலங்களில் இந்தியாவின் உதவிகளை நாடலாம் என்று மூத்த அறிவியல் செய்தியாளர் பல்லவ் பாக்லா கூறுகிறார்.
அதேநேரம் இந்த வெற்றியின் மூலம், பல நாடுகளும் அமைப்புகளும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நாடும்போது, வர்த்தக ரீதியிலும் பல வெற்றிகளை ஈட்ட முடியும் என்கிறார் இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானியும், சந்திரயான் திட்ட இயக்குநருமான அண்ணாதுரை.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் இலக்குகள் எப்படியிருக்கும் என்பது குறித்து பிபிசி தமிழோசையின் சுவாமிநாதன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தை இங்கே கேட்கலாம்.
No comments:
Post a Comment