Net1 யுனிவர்சல் எலக்ட்ரானிக் பேமெண்ட் சிஸ்டம் என்ற நிறுவனம் ‘விசா’ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தனது சேவைகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
‘நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் செயல்படுத்திவரும் பயோமெட்ரிக் வெரிஃபிகேஷன் தொழில்நுட்பத்தில் இந்திய அரசு ஆர்வம் காட்டுகிறது’ என்கிறார் நெட்1 தலைவர் செர்கெ பெலமன்ட். ‘இதன்மூலம் உதவித்தொகைகளைச் சரியான நபர்களுக்கு வழங்க இயலும்!’
அதேசமயம், தென் ஆப்பிரிக்காவில் இந்நிறுவனம் இச்சேவையை அறிமுகப்படுத்தியபோது ஏற்பட்ட சில பிரச்னைகள்குறித்து இன்னும் சர்ச்சை நீடிக்கிறது. இதில் பல மில்லியன் டாலர் ஊழல் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த டெண்டர்குறித்து அத்துமீறல் நடந்திருப்பதாக இவர்களுடைய போட்டி நிறுவனம் AllPay நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது.
ஒருபக்கம் இந்தச் சர்ச்சை நீடிக்க, இன்னொருபக்கம் நெட்1 நிறுவனம் இச்சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளது. இது தென் ஆப்பிரிக்கா, பிரேஸில் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு முயற்சியாக இருக்கும்.
‘இதன்மூலம், வங்கிச் சேவை இல்லாத பல கோடி ஏழை மக்கள் பயன் பெறுவார்கள்’ என்றார் செர்கெ பெலமன்ட். ‘வளரும் நாடுகளுக்கு இதுபோன்ற மொபைல் சார்ந்த சேவைகள்தான் சிறந்தவை! மார்க்கெட்டில் முன்னணியில் உள்ள எங்கள் சேவையை அரசு நிறுவனங்கள், வணிகர்கள், மற்ற நிதி சார்ந்த சேவை வழங்குநர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.’
‘இந்தச் சேவை இணையம் இல்லாமலும் இயங்கும். காரணம், எங்கள் ஸ்மார்ட் கார்ட் ரீடர் பேட்டரிமூலம் செயல்படுகிறது’ என்கிறது நெட்1. ‘ஆகவே, சிறிய, மிகச் சிறிய குக்கிராமங்களிலும் நிதிச் சேவைகளை வழங்க இயலும்.’
No comments:
Post a Comment