ஜப்பானைச் சேர்ந்த ஈகாமர்ஸ் நிறுவனம் Rakuten புகழ் பெற்ற மெஸேஜிங் அப்ளிகேஷனான Viberஐ உருவாக்கிய நிறுவனத்தை வாங்கியுள்ளது. இதற்காக அவர்கள் $900 செலவழித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
வைபர் அப்ளிகேஷன் பல வகை மொபைல்களிலும் கம்ப்யூட்டரிலும் இயங்கும். இதன்மூலம் பயனாளர்கள் அரட்டை அடிக்கலாம், மெஸேஜ் அனுப்பலாம், மற்ற பயனாளர்களை அழைத்துப் பேசலாம். இதில் தற்போது இருபது கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்கள் உள்ளார்கள்.
ஹிரோஷி மிகிடானி என்ற பெரும் பணக்காரருக்குச் சொந்தமான Rakuten நிறுவனம் ஈகாமர்ஸ், வங்கி, பயணம் போன்ற பலவிதமான சேவைகளை வழங்கிவருகிறது. சமீபத்தில் Kobo என்ற ஈபுக் ரீடர் உள்படப் பல இணையம் சார்ந்த நிறுவனங்களை அவர்கள் வாங்கிவருகிறார்கள். Pinterestலும் கணிசமான முதலீட்டைச் செய்துள்ளார்கள்.
இந்நிறுவனத்தின்கீழ் Viber புது அவதாரம் எடுக்குமா? அல்லது பழையபடி தொடருமா? கோடிக்கணக்கான பயனாளர்களின் கேள்வி இதுதான்!
No comments:
Post a Comment