சமீபத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளான DRS (Decision Review System)ஐ இந்தியா கையில் எடுத்துக்கொண்டு, தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதனை இன்னும் மேம்படுத்தவுள்ளது. இதற்கான அடித்தளம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICCயின் தலைமை இந்தியாவசம் வந்துள்ளதுதான். வரும் ஜூலையில் BCCI தலைவர் என் சீனிவாசன் ICC தலைவராகவுள்ளார்.
கிரிக்கெட் மிகவும் புகழ் பெற்றுள்ள நாடுகள் என்று பார்த்தால், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா. இந்த நாடுகளுக்குதான் ICCயின் தலைமையில் அதிகப் பொறுப்புகள் இனிமேல் இருக்கும்.
DRSபற்றி துபாயில் சமீபத்தில் ஒரு நீண்ட விவாதம் நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்ட் தலைவரான டேவிட் கோலியர், முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் அனில் கும்ப்ளே ஆகியோர் இதில் முக்கியப் பங்கு வகித்தனர்.
இதன்மூலம், DRSல் சில மாற்றங்கள் வரப்போவது உறுதி. தொழில்நுட்பத்தின் துணையோடு ஒரே பந்தைப் பலவிதமாகப் பார்த்துத் தீர்ப்பு வழங்கப்படும். விரைவில் பங்களாதேஷில் நடைபெறவுள்ள ட்வென்டி 20 உலகக் கோப்பைப் போட்டிகளில் இது அறிமுகப்படுத்தப்படும்.
ஆனால், இது போதாது. அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இன்னும் பல விஷயங்களைக் கொண்டுவரவேண்டியுள்ளது. அப்போதுதான் பிழைகளும் சர்ச்சைகளும் குறையும்.
ICCயின் சமீபத்திய சிங்கப்பூர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இன்னொரு முக்கியமான தீர்மானம், அயர்லாந்து, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு இங்கிலாந்து துணை நிற்கும். இதற்காக 2019ல் இங்கிலாந்து ஒரு டெஸ்ட் தொடருக்குத் திட்டமிட்டுள்ளது. Intercontinental Cupல் வெற்றி பெறும் நாடு, ICC உறுப்பினர் நாடுகளில் அடிமட்டத்தில் இருக்கும் நாட்டுடன் விளையாடி வெற்றிபெற்றால், அந்த நாட்டுடன் இங்கிலாந்து விளையாடும். இதுபோன்ற முயற்சிகளால் இன்னும் பல நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட்டினுள் நுழைய வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment