தொழில்நுட்பம் என்று வந்துவிட்டால், அமெரிக்காதான் உலகில் முதல் இடம். ஆனால், அவர்களுடைய வளர்ச்சியில் ஆசியாவுக்கு முக்கியப் பங்கு உண்டு!
நம்பச் சிரமமாக இருக்கிறதா? இதோ சில உதாரணங்கள்:
1. ஆப்பிள்: இந்நிறுவனத்தின் சமீபத்திய வருவாய் அறிக்கையில், சீனாவும் ஜப்பானும்தான் அதன் மிகப் பெரிய வளர்ச்சிப் பிரதேசங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சீனாவிலிருந்து முந்தைய மூன்று மாதங்களில் $8.8 பில்லியன் சம்பாதித்துள்ளது இந்நிறுவனம். இது மேலும் தொடரும்!
2. கூகுள்: தனது மோடரோலா ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்புப் பிரிவை லெனோவாவுக்கு விற்றுள்ளது கூகுள். இது ஒரு சீன நிறுவனமாகும். இதே நிறுவனம் முன்பு IBMன் கம்ப்யூட்டர் தயாரிப்புப் பிரிவை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
3. ஃபேஸ்புக்: இதில் மாதந்தோறும் 368 மில்லியன் பேர் ஆசியாவிலிருந்து வருகிறார்கள். அதன் மிகப் பெரிய வளர்ச்சி இங்கேதான், அதுவும் சீனாவின் துணை இல்லாமலே!
4. யாஹூ: இந்நிறுவனம் சீனாவின் மிகப் பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபாவில் 20% பங்குகளை வைத்துள்ளது. இந்நிறுவனம் யாஹூவைவிடச் சிறப்பாகச் செயல்பட்டு, யாஹூவின் வளர்ச்சிக்குத் தேவையான டாலர்களைக் குவித்துத் தருகிறது, அதன் சந்தை மதிப்பை உயர்த்துகிறது!
5. மைக்ரோசாஃப்ட்: இந்நிறுவனத்தின் புதிய தலைவர் சத்யா நாதெல்லா, இந்தியாவைச் சேர்ந்தவர். இவரைப்போல் ஆற்றல் மிகுந்த பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களாக உள்ள ஆசியர்கள் பலர்!
இவை சிறு உதாரணங்கள்மட்டுமே. இன்னும் சொல்லவேண்டுமென்றால், ட்விட்டர் அதிகம் பயன்படுத்தப்படும் நகரம் ஜகார்த்தா, சிலிக்கான் பள்ளத்தாக்கில் 21% எஞ்சினியர்கள் ஆசியாவில் பிறந்தவர்கள் என்று இன்னும் பல விஷயங்களை அடுக்கலாம். ஆசியா இன்றி உலகத் தொழில்நுட்பம் இல்லை!
No comments:
Post a Comment