நுடானிக்ஸ், கூகுள், யாஹூ நிறுவனங்களில் பணிபுரிந்தோர் இணைந்து உருவாக்கியிருக்கும்ThoughtSpot நிறுவனம், in-memory analytics and visualization துறையில் சிறந்து விளங்குகிறது.
இந்நிறுவனம் உருவாக்கியுள்ள applianceல் இருக்கும் மென்பொருள் எளிமையாகப் பயன்படுத்தவல்லது. அதேசமயம் இதற்காகப் பயனாளர்கள் தனி கம்ப்யூட்டர் சர்வர்களை வாங்கவேண்டாம், எதையும் இன்ஸ்டால் செய்யவேண்டாம். தானாக அவர்கள் வேண்டும் விடைகள்மட்டும் அவர்களை வந்தடையும்!
‘இதுதான் வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி’ என்கிறார் ThoughtSpot நிறுவனர்களில் ஒருவரான அஜீத் சிங். ‘இந்தத் துறையில் பல பெரிய நிறுவனங்கள் இருப்பினும், நடுத்தர அளவு நிறுவனங்களுக்கு ஏற்ற தயாரிப்புகள் இல்லை. அந்த இடைவெளியை நாங்கள் பூர்த்தி செய்வோம்!’
இந்த மென்பொருளில், ஒருவர் சாதாரணமாகப் பேசுவதுபோல் கேள்விகளை டைப் செய்து பதில் பெறலாம். தங்களுடைய பிஸினஸ் கேள்விகளுக்கு ஏற்ற துல்லியமான ஆய்வுகளை விரைவாக நிகழ்த்தலாம்.
இந்த மென்பொருள் விரைவில் Cloudமூலமாகவும் கிடைக்கும் என்கிறார் அஜீத் சிங். ‘அந்தவிதத்தில் நாங்கள் போட்டியாளர்களையெல்லாம் விஞ்சி நிற்போம்.’
தற்போது சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்குமட்டுமே வழங்கப்படும் ThoughtSpotன் விலை சுமார் $50,000. இதில் சுமார் 100 டெராபைட் விவரங்களை அலசமுடியும். அடுத்த சில மாதங்களில் இந்தச் சேவை எல்லாருக்கும் கிடைக்கும்.
Lightspeed Venture Partners உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதில் முதலீடு செய்துள்ளன. பெரும் வளர்ச்சியை எதிர்நோக்கி முன்னேறுகிறது இந்நிறுவனம்.
No comments:
Post a Comment